ஜேர்மனியில் அகதிகள் இல்லம் ஒன்றில் தீ: சதிவேலை என சந்தேகம்...
ஜேர்மனியில் அகதிகள் இல்லம் ஒன்றிற்கு தீவைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னணியில் சதிவேலை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஜேர்மன் நகரம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் இல்லம் ஒன்றிற்குத் தீவைக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட ஜேர்மனியில் உள்ள Wismar என்ற கிராமத்தில் அமைந்துள்ள அகதிகள் இல்லம் ஒன்றில் புதன்கிழமை தீப்பிடித்தது.
தீப்பிடிக்கும்போது, அந்த இல்லத்தில் 14 அகதிகளும், மூன்று ஊழியர்களும் இருந்துள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் உக்ரைன் அகதிகள் ஆவர்.
தீயில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை என்றாலும், அந்தக் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்னும் நிலையில் உள்ளது.
இந்த தீவைப்பு சம்பவத்திற்கு ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தற்போது தீவைக்கப்பட்டதாக கருதப்படும் இதே இல்லத்தில், கடந்த வார இறுதியில் யாரோ ஸ்வஸ்திகா உருவங்களை வரைந்து சென்றிருந்ததாக தெரிவித்துள்ள உள்ளூர் அரசியல்வாதியான Tino Schomann, இந்த தீயின் பின்னால் சதிவேலை உள்ளது, அந்தக் கட்டிடம் தானாக தீப்பற்றி எரியவில்லை என்று கூறியுள்ளார்.