பிரித்தானியாவில் நதி ஒன்றில் இறந்து கிடந்த ஐந்து வயது சிறுவன்... மற்றொரு சிறுவன் மீது கொலைக்குற்றச்சாட்டு: ஒரு திடுக் சம்பவம்
பிரித்தானியாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் நதி ஒன்றில் இறந்துகிடந்த வழக்கில், 14 வயது சிறுவன் ஒருவன் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேல்ஸ் நாட்டிலுள்ள Bridgend என்ற இடத்தைச் சேர்ந்த Logan Williamson என்ற ஐந்து வயது சிறுவன், Ogmore நதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான்.
அந்த துயர சம்பவம் குறித்த விசாரனையின்போது அவனது தாயின் கணவரான John Cole (39) என்பவரது உடலில் பல கீறல்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அத்துடன், உண்மையை மறைக்க உதவியதற்காக Loganஇன் தாயாகிய Angharad Williamson (30) மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீண்ட நாட்களாக நடந்து வரும் இந்த விசாரணையில், தற்போது 14 வயது சிறுவன் ஒருவன் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவனது வயது காரணமாக அவனது பெயர் மற்றும் புகைப்படம் முதலான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அந்த சிறுவன் இன்று Cardiff மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட் உள்ளான்.
Loganஇன் கொலையில் அந்த சிறுவன், Loganஇன் தாயின் கணவரான John, Loganஇன் தாயாகிய Angharad ஆகிய மூவருக்கும் என்னென்ன பங்கு என்பது குறித்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு துவக்கப்பட உள்ளது.