ஜேர்மன் குடும்பம் ஒன்றிற்கு எரிவாயு நிறுவனத்தில் இருந்து வந்த கடிதம் கொடுத்த அதிர்ச்சி...
ஜேர்மனியில், மக்கள் தங்கள் எரிவாயு மற்றும் மின்கட்டணத்துக்காக மாதந்தோறும் அட்வான்ஸ் தொகை ஒன்றை செலுத்தவேண்டும்.
இம்முறை 10 மடங்குக்கும் அதிகமாக கட்டணம் செலுத்தும்படி எரிவாயு விநியோகஸ்தர்கள் சிலர் கோரியுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது..
ஜேர்மன் மாகாணம் ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தினருக்கு வந்த ஒரு கடிதம் கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்தது.
அந்தக் கடிதம், Brandenburg மாகாணத்தில் வாழும் ஒரு வீட்டுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனத்திடமிருந்து வந்துள்ளது.
ஜேர்மனியில், தங்கள் எரிவாயு மற்றும் மின்கட்டணத்துக்காக மக்கள் மாதந்தோறும் அட்வான்ஸ் தொகை ஒன்றை செலுத்தவேண்டும்.
அவ்வகையில், அந்த குடும்பத்துக்கு வந்த கடிதம், எதிர்வரும் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, மாதம் ஒன்றிற்கு 1,515 யூரோக்கள் கட்டணம் செலுத்தவேண்டும் என்று கூற, அதிர்ச்சியில் ஆழ்ந்தது அந்தக் குடும்பம்.
காரணம், அவர்கள் வழக்கமாக செலுத்தும் தொகை வெறும் 143 யூரோக்கள்தான். அதாவது, இம்முறை 10 மடங்குக்கும் அதிகமாக கட்டணம் செலுத்தும்படி அந்த கடிதம் கூறியது.
இந்நிலையில், 40 சதவிகித ஜேர்மானியர்கள் எதிர்வரும் குளிர்காலத்தில் ஆற்றல் கட்டணங்கள் செலுத்துவது தொடர்பில் பிரச்சினைகளை எதிர்பார்ப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சரி, அந்த 10 மடங்கு கட்டணம் செலுத்தக் கேட்கப்பட்ட குடும்பத்துக்கு தீர்வு என்ன?
நுகர்வோர் மையங்கள், அந்த வாடிக்கையாளர்களை குறைவான விலையில் எரிவாயு வழங்கும் வேறொரு விநியோகஸ்தரிடம் எரிவாயு வாங்குமாறு ஆலோசனை கூறியுள்ளன.
பிரச்சினை என்னவென்றால், எங்குமே இப்போது குறைந்த விலையில் எரிவாயு கிடைப்பதில்லையே!