வடகொரியாவுக்கு பெரும் தலைக்குனிவு: வெடித்துச் சிதறிய உளவு செயற்கைக்கோள்
வடகொரியா, உளவு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவ இருப்பதாக வெளியான தகவல் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கிய நிலையில், அந்த திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
வடகொரியாவுக்கு பெரும் தலைக்குனிவு
ஒரு பக்கம், ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்துவதாக அவ்வப்போது எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருக்கும் நிலையில், என்னிடமும் அணு ஆயுதம் உள்ளது, நானும் சோதனை செய்கிறேன் பேர்வழி என அவ்வப்போது தன் இருப்பையும் பிரகடனப்படுத்திக்கொண்டே இருப்பவர் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்.
Credit: AP
தவறுதலாக, அல்லது முட்டாள்தனமாக ஏதாவது ஒரு நாடு அணு ஆயுத விடயங்கள் தொடர்பில் எடுக்கும் முடிவு, மூன்றாம் உலகப்போரையே துவக்கிவிடலாம் என ஏற்கனவே நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், கிம் ஜாங் உன்னும் அவ்வப்போது எதையாவது செய்து தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிவருகிறார்.
அவ்வகையில், வடகொரியா உளவு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவ இருப்பதாக ஜப்பான் வெளியிட்ட தகவல் பதற்றத்தை உருவாக்கியிருந்தது. ஆனால், வடகொரியா மீண்டும் ஒரு தலைக்குனிவையே சந்தித்துள்ளது.
வெடித்துச் சிதறிய உளவு செயற்கைக்கோள்
ஆம், நேற்று இரவு வடகொரியா விண்ணில் செலுத்திய உளவு செயற்கைக்கோள், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றிரவு புதிய உளவு ராக்கெட் ஒன்று ஏவப்பட்டதாக வடகொரியாவின் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. ஆனால், இயந்திரக் கோளாறு காரணமாக, ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த ராக்கெட் வெடித்துச் சிதறியதாக அதே தொலைக்காட்சி தெரிவித்தது.
Credit: Handout - Getty
ஜப்பானிய தொலைக்காட்சி ஒன்று, அந்த செயற்கைக்கோள் வெடித்துச் சிதறும் காட்சி என கருதப்படும் ஒரு காட்சியை ஒளிபரப்பியுள்ளது. இதனால், கொரிய தீபகற்பத்தில் நிலவிய பதற்றம், தற்காலிகமாகவாவது அடங்கியதால், மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |