பதின்ம வயது மகளுடன் மர்மமான முறையில் மாயமான அழகிய மொடல்: குற்றவாளியைத் தேடும் இண்டர்போல்
துருக்கியில், மொடலாகிய பெண் ஒருவரும் அவரது பதின்ம வயது மகளும் மர்மமான முறையில் மாயமான நிலையில், அவர்கள் இருவருடைய உயிரற்ற உடல்களும், சாலையோரமாக போர்வைகளில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மர்மமான முறையில் மாயமான பெண்கள்
ரஷ்யப் பெண்ணான ஐரினா (Irina Dvizova, 42) ஒரு மொடலும், டிக்டாக் பிரபலமும் கூட. ஐரினாவும் அவரது மகளான டயானாவும் (Dayana Dvizova, 15) டயானாவின் 15ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குச் சென்றுள்ளார்கள்.
அவர்கள் இருவரையும் மொபைலில் தொடர்புகொள்ள முடியாததால், அவர்களுடைய உறவினர்கள் பொலிசாருக்கு தகவலளித்தார்கள்.
east2west news
துருக்கி பொலிசார் ஐரினாவின் வீட்டை சோதனையிட்டபோது, அங்கிருந்த சோபாவில் இரத்தக்கரை இருப்பது தெரியவரவே, CCTV கமெரா காட்சிகளை ஆராய்ந்துள்ளார்கள். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் கார் ஒன்று கண்ணில் பட, அதைத் தேடிச் சென்றவர்களுக்கு, Bodrum என்னுமிடத்துக்கு அருகில், துணியில் சுற்றப்பட்டு கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், சாலையோரமாக இருவரும் சிறிது இடைவெளியில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.
இருவரது உடல்களும் துப்பாக்கிக்குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்டிருந்தன.
குற்றவாளியைத் தேடும் இண்டர்போல்
ஐரினாவுக்கும் அவரது முன்னாள் கணவரான ஆண்ட்ரேக்கும் ( Andrey Kuslevich, 45) Makar என்னும் ஐந்து வயது மகனும் இருக்கிறான். தம்பதியர் பிரிந்த நிலையில், மகன் யாரிடம் வளர்வது என்பது தொடர்பில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
DHA/east2west news
ஆண்ட்ரே லிதுவேனியா நாட்டவர் ஆவார். ஆகவே, ஐரினாவையும் அவரது மகளையும் படுகொலை செய்ததாக பொலிசார் ஆண்ட்ரேயை தேடிவரும் நிலையில், அவர் துருக்கியில் இல்லை என்பது தெரியவரவே, அவர்கள் இண்டர்போலின் உதவியை நாடியுள்ளார்கள். அத்துடன், ஐரினா, டயானா கொலைகளுக்குப் பிறகு Makarஐயும் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |