45 ஆண்டுகளாக.. மோசமான குற்றங்களில் ஈடுபட்ட பிரத்தானியருக்கு சிறையில் நேர்ந்தது என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்
பிரித்தானியா சிறையில் வசித்து வந்த 70 வயது முதியவர் திடீரென கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஹிண்ட்லி என்ற நகரில் டென்னிஸ் ஸ்மலி என்ற 70 வயது முதியவர் வசித்து வந்தார். இவர் கடந்த 1970 ஆம் வருடத்திலிருந்து சுமார் 45 வருடங்களாக தொடர்ந்து கற்பழிப்பு குற்றங்களை செய்து வந்திருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் பாலியல் துன்புறுத்தல், கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டு பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது 25 பாலியல் குற்றங்கள் உட்பட மொத்தமாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்பு லிவர்பூல் நகரத்தில் இருக்கும் வாக்பில்ட் நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றங்கள் உண்மைகள் என நிரூபிக்கப்பட்டு 25 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன் பின்பு கடந்த மார்ச் மாதம் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.