அமேசான் காட்டில் வழி தவறி காணாமல் நபர்! ஓரு மாத காலமாக சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்துள்ளதாக தகவல்
இளைஞன் ஒருவர் 1 மாத காலமாக அமேசன் காட்டில் பூச்சி, புழுக்களை திண்று உயிர் வாழ்ந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி பொலிவியன் நாட்டை சேர்ந்த 30 வயதான ஜொனாடன் அகோஸ்டா என்பவர் தனது 4 நண்பர்களுடன்அமேசான் காட்டிற்கு வேட்டையாட சென்றுள்ளார்.
அப்போது, அகோஸ்டா அமேசான் காட்டில் வழி தவறி காணாமல் போக தனது தனது நண்பர்களுடனான தொடர்பையும் அவர் இழந்தார்.
image - Newsflash
இதனால், அகோஸ்டாவிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லாததை அடுத்து, அவரது குடும்பத்தினர் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்பு மீட்பு குழுவினர் அமேசான் காட்டில் வலை வீசி தேடி வந்தனர்.
தேடுதல் வேட்டையின் பின் அகோஸ்டா மெலிந்த உடல் நிலையுடன் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,
அமேசான் காட்டில் ஒரு மாதமாக உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தேன். அங்குள்ள பூச்சி, புழுக்களை திண்று பசியாற்றியும் மழை பெய்யும்போது தான் போட்டிருக்கும் பூட்ஸ் ஷூ மூலம் தண்ணீர் பிடித்து குடித்தேன்.
தண்ணீர் கிடைக்காத சில இடங்களில் தனது சிறுநீரையே குடித்து உயிர் பிழைத்து வந்துள்ளார்.
image - REUTERS
"நான் கடவுளிடம் மழையைக் கேட்டேன், அது பெய்யாமல் இருந்திருந்தால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்" என்று அகோஸ்டா கூறியுள்ளார்.
காட்டைவிட்டு வெளியேற திசை தெறியாமல் சுமார் 40 கிலோ மீட்டர் நடந்ததன் காரணமாக அவர் சுமார் 17 கிலோ உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
மேலும் அமேசான் மழைக்காடுகளில் இவ்வளவு காலம் உயிர் பிழைத்த ஒரே நபர் இவர் தான் என்ற பெருமையை பெறுவார் என்றும் கூறப்படுகின்றது.