9 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொள்ளை... பாதி கடித்துவிட்டு போட்ட இறைச்சியால் சிக்கிய குற்றவாளி
ஜேர்மனியில் 9 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொள்ளை சம்பவம் ஒன்றில் குற்றவாளி சிக்காமலே இருந்த நிலையில், அவர் கடித்துவிட்டு போட்ட இறைச்சித் துண்டால் தற்போது சிக்கியிருக்கிறார்.
2012ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜேர்மனியிலுள்ள Gevelsberg நகரில் கொள்ளைச் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
அப்போது, கொள்ளையடித்துச்சென்ற நபர், இறைச்சித்துண்டு ஒன்றை கடித்துவிட்டு மீதித்துண்டை போட்டுச் சென்றிருந்திருக்கிறார்.
ஜேர்மனியில் நடந்த அந்த கொள்ளை வழக்கில் குற்றவாளி ஒன்பது ஆண்டுகளாக சிக்காமலே இருந்த நிலையில், சமீபத்தில் பிரான்சில் வன்முறைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட அல்பேனிய நாட்டவரான 30 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரது DNAவை குற்றவாளிகளுடைய DNA பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அது 9 ஆண்டுகளுக்கு முன் ஜேர்மனியில் நடந்த கொள்ளை சம்பவத்தின்போது கிடைத்த இறைச்சித் துண்டில் இருந்த DNAவுடன் ஒத்துப்போவது தெரியவந்துள்ளது.
ஆனால், சிக்கல் என்னவென்றால், குற்றவாளியை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர சட்டத்தால் கொடுக்கப்பட்டிருந்த கால வரையறை காலவதியாகிவிட்டது.
ஆகவே, இனி அவரை அந்த கொள்ளைக் குற்றத்திற்காக கைது செய்ய முடியாது. அதாவது அவரை பிரான்சிலிருந்து ஜேர்மனிக்கு நாடு கடத்த முடியாது. ஆகவே, அவர் சுதந்திரமாக நடமாடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.