காருக்குள் இருந்த ஒரு பொருள்! அதில் பயணம் செய்த நபருக்கு மரண தண்டனை விதிப்பு... எந்த நாட்டில் தெரியுமா?
கஞ்சாவுடன் நாட்டுக்குள் வந்த குற்றத்திற்காக சிங்கப்பூரை சேர்ந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒமர் யாகப் பமதாஜ் (41) என்பவரே தண்டனை பெற்றவர் ஆவார். தண்டனையை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அது சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கவிடப்பட்டு ஓமருக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என தெரியவந்துள்ளது. ஓமர் கடந்த 2018ஆம் ஆண்டு குறைந்தபட்சம் 2 பவுண்ட் கஞ்சாவை நாட்டுக்குள் கொண்டு வந்தார் என அவர் மீது வழக்கு பாய்ந்தது.
அவர் பயணித்து வந்த காருக்குள் கஞ்சா இருப்பதை அப்போது அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஓமர் உண்மையில் தனக்கு தெரிந்து தான் கஞ்சாவை நகருக்குள் கொண்டு வந்தாரா என சந்தேகம் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் வாதாடினர்.
அதே போல தனக்கு தெரியாமல் யாரோ அதை காருக்குள் போட்டு விட்டதாக ஓமர் கூறினார். ஆனால் அவர்களின் தொடர் வாதங்கள் எடுபடவில்லை,
இதையடுத்தே அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.