பிரித்தானியா இறைச்சி பிரச்சினைக்கு ஒரு தீர்வு... பிரித்தானியாவுக்கு சாதகமான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதா ஐரோப்பிய ஒன்றியம்?
நீண்ட நாட்களாக பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இருந்த இறைச்சி தொடர்பிலான ஒரு பிரச்சினை முடிவுக்கும் வரும்போலிருக்கிறது.
பிரெக்சிட் என்னும் ஒரு சொல் உண்டுபண்ணின பிரச்சினைகள் ஏராளம். சில இழப்புக்களை எண்ணி ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறியது பிரித்தானியா. ஆனால், அதற்குப் பிறகு பிரித்தானிய மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகள் ஏராளம்.
உணவுப்பொருட்களுக்கே சிக்கல் வரும் அளவுக்கு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.
குறிப்பாக, நிலப்பரப்பில் ஒரு தீவாக இருக்கும் அயர்லாந்துக்கும் வட அயர்லாந்தும் பிரிந்ததால், அதாவது அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதி, வட அயர்லாந்தோ ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அங்கு ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சினை பெரிதாகி சாசேஜ் யுத்தம் என்றே அழைக்கப்படும் அளவுக்கு ஒரு பெரிய பிரச்சினை நடந்துகொண்டிருக்கிரது.
அதாவது, பிரெக்சிட்டுக்குப் பிந்தைய வர்த்தக விதி ஒன்றின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மாமிசம் தொடர்பான எந்த பொருட்களையும் பிரித்தானியாவுக்குள் கொண்டு செல்ல முடியாது.
அதன்படி, உதாரணமாக இங்கிலாந்திலிருந்து சாசேஜ் முதலான உணவுப் பொருட்களை, அயர்லாந்து கடல் பரப்பைக் கடந்து, அயர்லாந்து வழியாக வட அயர்லாந்துக்கு அனுப்ப முடியாது.
இந்த பிரச்சினை இவ்வளவு நாட்களாக இரு சாராருக்கும் இடையே உரசலை ஏற்படுத்திவந்த நிலையில், திடீரென ஐரோப்பிய ஒன்றியம் சற்று இறங்கிவந்திருக்கிறது.
இனி வட அயர்லாந்துக்கு சாசேஜ் முதலான உணவுப்பொருட்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடைக்கு விரித்தானியாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.
இது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை அடுத்த வாரம் பிரெக்சிட் ஆணையரான Maros Sefcovic அறிவிக்க இருக்கிறார்.
ஒரு பக்கம் இந்த திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளும் சம்மதிக்கவேண்டும் என்றாலும், இன்னொரு பக்கம், இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுமானால், கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் பிரித்தானியர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களுடன் மாமிச உணவைப் பகிர்ந்துகொள்வதில் பிரச்சினை இருக்காது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயம்.
இதற்கிடையில், ஏற்கனவே மீன் பிடித்தல் பிரச்சினையில் பிரான்சுக்கு குட்டு வைத்த ஐரோப்பிய ஒன்றியம், தற்போது சாசேஜ் யுத்தத்திலும் இறங்கிவந்துள்ளதால், அது பிரித்தானியாவுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது!