ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடமிருந்து ஒரு கிராமத்தையே காப்பாற்றிய வீர இளம்பெண்
இஸ்ரேல் நாட்டு இளம்பெண் ஒருவர், 700 பேர் கொண்ட தன் முழு கிராமத்தையே ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடமிருந்து காப்பாற்றியுள்ளார்.
துணிச்சல்கார இளம்பெண்
சனிக்கிழமை காலை இஸ்ரேலை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்கத் துவங்கியதும், வெடிச்சத்தம் கேட்ட Nir Am என்னும் இஸ்ரேல் கிராமத்தினர் உஷாராகியுள்ளனர்.
அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த Inbar Lieberman (26) என்னும் இளம்பெண், உஷாராக காத்திருந்தால் போதாது, செயலில் இறங்குவதுதான் சரி என முடிவு செய்துள்ளார்.
அதன்படி, தன் கிராமத்தைச் சேர்ந்த 12 பேருக்கு ஆயுதங்களை வழங்கி, அவர்களை எந்த இடத்தில் நிறுத்தினால், எதிரியைத் தாக்கமுடியுமோ, அதற்கேற்றபடி சரியாக திட்டமிட்டு நிறுத்தியுள்ளார் Inbar.
உள்ளூர் ஊடகங்கள் புகழாரம்
தாக்க வந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினரை சரமாரியாக சுட்டு ஐந்து பேரை Inbar கொல்ல, மற்றவர்கள் 20க்கும் அதிகமானவர்களை கொன்றிருக்கிறார்கள்.
பக்கத்து கிராமத்தில் 40 குழந்தைகள் உட்பட ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், Inbarஇன் கிராமத்தில், சுமார் 700 பேர் அவரது துணிச்சலாலும், சமயோகித புத்தியாலும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
உள்ளூர் மக்கள் Inbarஐ ஹீரோ என புகழ, உள்ளூர் ஊடகமான The Maariv Daily, அவருக்கு இஸ்ரேல் பதக்கம் வழங்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |