மீண்டும் RCB அணியில் ஏபி டி வில்லியர்ஸ்? அவரே சொன்ன தகவல்
மீண்டும் RCB அணியில் இணைவது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஏபி டி வில்லியர்ஸ், ஐபிஎல் தொடரில் 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை RCB அணிக்காக விளையாடினார்.
RCB அணிக்காக 157 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 சதம் மற்றும் 37 அரைசதம் உட்பட 158.33 ஸ்ட்ரைக்ரேட் உடன் 4,522 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார்.
2025 ஐபிஎல் தொடரில் RCB அணி முதல்முறையாக கோப்பை வென்றதை காண, இறுதிப்போட்டிக்கு நேரில் வருகை தந்திருந்தார்.
மீண்டும் RCB அணியில் வாய்ப்பு
இந்நிலையில், மீண்டும் RCB அணியில் பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக இணைவது குறித்து டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "2026 ஐபிஎல் தொடரில் நான் வேறு ஒரு வேடத்தில் மீண்டும் பங்கு பெறலாம். ஆனால் முழு தொடருக்கும் ஒரு தொழில்முறை வீரராக செயல்படுவது கடினம். அந்த காலம் முடிந்து விட்டது.
ஆனால் என் இதயம் RCB உடன் தான் உள்ளது. எப்போதும் RCB உடன் தான் இருக்கும். அணி நிர்வாகம் எனக்கு ஒரு வாய்ப்பு (பயிற்சியாளர் அல்லது ஆலோசகர்) வழங்க விரும்பினால், எனக்கும் நேரம் சரியாக, தயாராக இருந்தால் அது RCBக்கு தான்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |