மீண்டும் கோலியின் கூட்டாளி ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆர்.சி.பி அணியில்! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
2022 ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியில் மீண்டும் ஜாம்பவான் ஏ.பி. டிவில்லியர்ஸ் இடம்பிடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் வீரராக இல்லாமல் அணியின் ஆலோசகராக அவர் செயல்படுவார் என தெரியவந்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021க்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) விக்கெட் கீப்பருமான ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இருப்பினும், ஐபிஎல் 2022-ல் டி வில்லியர்ஸ் மீண்டும் டி20 லீக்கிற்குத் திரும்ப உள்ளார். ஆனால் வீரராக அல்ல ஒரு புதிய பாத்திரத்தில். சனிக்கிழமை (மார்ச் 12) ஒரு நிகழ்வில், ஆர்சிபி புதிய கேப்டனை அறிவிக்கப் போவது மட்டுமல்லாமல், டி ல்லியர்ஸை ஒரு 'ஆலோசகராக' வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
ஐபிஎல் 2021க்குப் பிறகு விராட் கோலி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு டிவில்லியர்ஸை பயிற்சியாளர் குழுவில் 'வழிகாட்டியாக' சேருமாறு கோலி கேட்டுக் கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் 2022க்கான புதிய கேப்டனாக டி வில்லியர்ஸின் நாட்டவரான ஃபாஃப் டு பிளெசிஸை RCB பெயரிட உள்ளது. இதற்காக மார்ச் 12 ஆம் திகதி மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்புக்கு RCB அழைப்பு விடுத்துள்ளது.
ஏ.பி.டிவில்லியர்ஸ் அணியின் மெண்ட்டாராக வந்த பிறகாவது ஆர்சிபி அணி கோப்பையை தட்டி தூக்குமா என ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.