ஏலத்தில் வாங்கிய பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட சடலம்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி
விலைமதிப்புள்ள பொருட்களை எதிர்பார்த்து பெட்டிகளை திறந்து பார்த்த அந்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி
உறவினர்கள் கண்டிப்பாக நியூசிலாந்தில் குடியிருப்பவர்கள் - இதுவரை அடையாளம் காணப்படவில்லை
நியூசிலாந்தில் ஏலத்தில் வாங்கிய பெட்டிக்குள் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், அது இரு இளம் சிறார்களின் உடல்கள் என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
நியூசிலாந்தின் மனுரேவா பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று ஆகஸ்டு 11ம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஏலத்தில் இரண்டு கனமான பெட்டிகளை வாங்கியுள்ளனர். இதில் விலைமதிப்புள்ள பொருட்களை எதிர்பார்த்து பெட்டிகளை திறந்து பார்த்த அந்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
@Newshub
குறித்த பெட்டிக்குள் நாள்பட்ட மனித உடல் பாகங்கள் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, தீவிர ஆய்வுக்கு பின்னர் வியாழக்கிழமை தெரிவித்த தகவலில், அந்த பெட்டிக்குள் காணப்பட்ட சடலமானது இரு இளம் சிறார்களது என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், மூன்றில் இருந்து நான்காண்டுகள் அந்த பெட்டிக்குள் அந்த உடல்கள் இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ஏலத்தில் விற்ற நிறுவனத்திற்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை எனவும் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
@Newshub
இணையமூடாக வாங்கப்படும் இதுபோன்ற பயன்படுத்தப்பட்ட பெட்டிகளை திறந்து பார்க்க அனுமதிப்பதில்லை. ஏலத்தில் வென்றால் மட்டுமே பொருட்களை திறந்து பார்க்க முடியும்.
அப்படியான சூழலில் மனுரேவா குடும்பத்தினருக்கு கிடைத்த பெட்டிகளில் மனித உடல் பாகங்கள் இருந்துள்ளது.
மேலும், சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறார்களின் உறவினர்கள் கண்டிப்பாக நியூசிலாந்தில் குடியிருப்பவர்கள் எனவும், இதுவரை சிறார்களின் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.