20 பேருக்கு மரண தண்டனை! வங்கதேசத்தை உலுக்கிய மாணவர் படுகொலை வழக்கில் தீர்ப்பு

Bangaldesh DeathSentence MurderCase BUET AbrarFahad
By Basu Dec 08, 2021 07:30 AM GMT
Report

 வங்க தேசத்தை உலுக்கிய வங்க தேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (BUET) மாணவர் அப்ரார் பஹத் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டாக்கா விரைவு நீதிமன்றம் 1-ன் நீதிபதி Abu Zafar Md Kamaruzzaman புதன்கிழமை இந்த வழக்கில் தனது தீர்ப்பை வழங்கினார்.

அப்ரார் பஹத் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 25 பேரில், 20 பேருக்கு மரண தண்டனையும், 5 பேருக்கு வழ்நாள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி தீரப்பளித்தார்.

2019 அக்டோபர் 7ம் திகதி BUET-ல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் அப்ரார், பல்கலைக்கழகத்தின் Sher-e-Bangla ஹாலில் சில BCL ஆர்வலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அக்டோபர் 7ம் திகதியே அப்ராரின் தந்தை Barkat Ullah, சவ்க்பஜார் காவல் நிலையத்தில் BUET BCL தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது புகார் அளித்தார்.

இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது, கொல்லப்பட்ட அப்ராருக்கு நீதி கேட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

சமூக வலைதளங்களிலும் பலர் அப்ராருக்கு நீதி கேட்டு பரப்புரை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு பின்னர் அப்ராரின் தந்தையின் கோரிக்கையை ஏற்று விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

20 பேருக்கு மரண தண்டனை! வங்கதேசத்தை உலுக்கிய மாணவர் படுகொலை வழக்கில் தீர்ப்பு | Abrar Murder Case Verdict 20 Sentenced To Death

2019 நவம்பர் 13 ஆம் திகதி, துப்பறியும் பிரிவு இன்ஸ்பெக்டர் Md Wahiduzaman, குற்றம் சாட்டப்பட்ட 25 பேருக்கு எதிராக தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தார்.

2020 செப்டம்பர் 15 அன்று தீர்ப்பாயம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் 60 சாட்சிகளில் 46 சாட்சிகளின் வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்தது.

முன்னதாக, டாக்கா தீர்ப்பாயம் 2021 நவம்பர் 28 ஆம் திகதி தீர்ப்பை வழங்குவதாக இருந்தது. ஆனால் பின்னர், அது 2021 டிசம்பர் 8 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் 20 பேருக்கு மரண தண்டனையும், 5 பேருக்கு வழ்நாள் சிறை தண்டனையும் வழங்கி டாக்கா விரைவு நீதிமன்றம் 1-ன் நீதிபதி Abu Zafar Md Kamaruzzaman தீரப்பளித்தார்.

20 பேருக்கு மரண தண்டனை! வங்கதேசத்தை உலுக்கிய மாணவர் படுகொலை வழக்கில் தீர்ப்பு | Abrar Murder Case Verdict 20 Sentenced To Death

அப்ரார் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 பேரில் மூவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.            



மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US