இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம்! கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரம், இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கணக்கெடுப்பு
சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பில் அபுதாபி நகரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் நகரில் வசிக்கும் 160க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 92,576 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 14 முக்கிய தலைப்புகளில் கருத்துகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
அதில் வீட்டு வசதி, வேலை வாய்ப்புகள், தனிநபர் மற்றும் குடும்ப வருமானம், சொத்துகள், வேலை குறித்த தகவல்கள், சுகாதாரம், கல்வி, தனித்திறன்கள் மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டது.
இரவில் தனியாக நடக்கும் மக்களின் பாதுகாப்பு
அதன் முடிவில் 73 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்துடன் செலவழித்த நேரத்தால் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தெரிவித்தனர்.
34.3 சதவீதம் பேர் வருமானத்தில் திருப்தி அடைந்துள்ளதாகவும், அதேபோல் தனிநபர் வருமானத்தில் 64.7 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளதாகவும், 70.6 சதவீதம் பேர் தாங்கள் வசிக்கும் வீடுகள் வசதியாகவும், திருப்திகரமாகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெரும்பாலான மக்கள் இரவில் தனியாக நடக்கும்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு உறுதி செய்தது. இதில் 93.6 சதவீதம் பேர் தங்கள் கருத்துகளை கூறினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |