ஜேர்மனியில் நிலநடுக்கம் உருவானதாக பதிவான விபத்து: சுனாமியை உருவாக்கிய உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி...
ஜேர்மனியில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி வெடித்துச் சிதறிய சம்பவம் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கமாக பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உலகின் மிகப்பெரிய உருளை வடிவ மீன் தொட்டி
AquaDom என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய உருளை வடிவ மீன் தொட்டி, ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள Radisson Blu Hotel என்ர ஹொட்டலில் அமைக்கப்பட்டிருந்தது.
82 அடி உயரம் கொண்ட அந்த மீன் தொட்டியில் சுமார் 1,500 வகை மீன்கள் விடப்பட்டிருந்தன.
lCredit: AP
திடீரென நிகழ்ந்த விபத்து
ஒரு மில்லியன் லிற்றர் தண்ணீர் இருந்த அந்த மீன் தொட்டி நேற்று அதிகாலை 6.00 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறியது.
எதனால் அந்த மீன் தொட்டி வெடித்தது என்பது இதுவரை உறுதிசெய்யப்படாத நிலையில், கடும் குளிர் காரணமாக அது வெடித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அந்த தொட்டி வெடித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி, ரிக்டர் அளவுகோலில், அதாவது நிலநடுக்கத்தை அளவிடும் அமைப்பில் 1.2 அளவிலான நிலநடுக்கமாக பதிவாகியுள்ளதாக துறைசார் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
அத்துடன், அந்த தொட்டியிலிருந்த சுமார் ஒரு மில்லியன் லிற்றர் தண்ணீர், சுனாமி போல் மீன்களையும் கண்ணாடியையும் அடித்துக்கொண்டு தெரு வரை வந்துள்ளது.
அந்த 1,500 மீன்களில், சில மீன்கள் தவிர மற்றவை அனைத்தும் உயிரிழந்துவிட்டன. ஆனால், இரண்டு பேர் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த பயங்கர விபத்தில் எந்த காயங்களும் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
அந்த மீன் தொட்டி, 2004ஆம் ஆண்டு முதன்முதலில் நிறுவப்பட்டபோது, அதன் மதிப்பு 11.2 மில்லியன் பவுண்டுகளாக மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Credit: AFP
Credit: Twitter/Radisson Blu Berlin
Credit: AP
Credit: AP
Credit: AP