நைஜீரியாவில் சோக நிகழ்வு: 22 விளையாட்டு வீரர்கள் பலி
நைஜீரியாவில் நடந்த வாகன விபத்தில் 22 விளையாட்டு வீரர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு வீரர்கள் பலி
நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் நிகழ்ந்த ஒரு துயரமான பேருந்து விபத்தில் 22 விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் உயிரிழந்தனர்.
இந்த பேருந்து விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஒகுன் மாகாணத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விட்டு, 35 விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சியூன் அருகே மேம்பாலம் ஒன்றில் சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் நீண்ட நேர சோர்வு, மோசமான சாலை நிலைமைகள் மற்றும் அதிக வேகம் ஆகியவை விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |