ரஷ்யாவுக்கு உதவுவதாக குற்றச்சாட்டு: நாடொன்றை மறைமுகமாக விமர்சித்த ஜேர்மனி
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவுவதாக தென்னாப்பிரிக்கா மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அந்நாட்டுக்குச் சென்றுள்ள ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் மறைமுகமாக விமர்சனம் ஒன்றை முன்வைத்தார்.
ரஷ்யாவுக்கு உதவுவதாக குற்றச்சாட்டு
தென்னாப்பிரிக்கா உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவுவதாக அந்நாட்டின்மீது அமெரிக்க தூதரான Reuben Brigety குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருந்தார்.
தென்னாப்பிரிக்காவிலுள்ள Cape Town நகருக்கு வந்திருந்த ரஷ்யக் கப்பல் ஒன்றில் தென்னாப்பிரிக்கா ஆயுதங்களை ஏற்றியதாக அவர் கூறியிருந்தார்.
ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம்
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock, தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சரான Naledi Pandorஐ சந்தித்தார்.
சந்திப்பின்போது, தென்னாப்பிரிக்காவில் கடினமான சூழலை உருவாக்கியுள்ள உணவு மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரிப்புக்கு காரணம் ரஷ்யா உக்ரைனை சட்ட விரோதமாக ஊடுருவியதுதான் என்று கூறினார் Annalena.
இந்த துயரங்கள் முடிவுக்கு வரவேண்டுமானால், போர் முடிவுக்கு வந்தாகவேண்டும் என்றார் அவர். போர் முடிவுக்கு வரவேண்டுமானால், ரஷ்யா குண்டு வீசுவதை நிறுத்திக்கொண்டு தனது வீரர்களை உக்ரைனிலிருந்து விலக்கிக்கொள்ளவேண்டும் என்று கூறிய Annalena, இது ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் மீதான தாக்குதல், நம்மையெல்லாம் இணைத்து பாதுகாக்கும் அதே விதிகள் மீதுதான் அந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |