விலையுயர்ந்த பழத்தை வாங்கிய பெண் செய்த செயல்: கோபத்தில் மக்கள்...
துபாயில் வாழும் பணக்காரப் பெண் ஒருவர், விலையுயர்ந்த திராட்சைப் பழங்களை வாங்கியுள்ளார். ஆனால், அவர் செய்த செயலைக் கண்டு மக்கள் கோபக் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.
விலையுயர்ந்த பழத்தை வாங்கிய பெண்
சமூக ஊடகம் ஒன்றில் வீடியோக்களை வெளியிடும் பணக்காரப் பெண் தலீலா (Dalila Laaribi). துபாயில் வாழும் தலீலா, சமீபத்தில் உலகிலேயே விலையுயர்ந்த திராட்சைப்பழங்களை வாங்கியுள்ளார்.
அவர் கையில் வைத்திருக்கும் திராட்சைக் குலையின் விலை மட்டுமே, 91 பவுண்டுகள். ஆனால், அவருக்கு அந்த திராட்சைப் பழங்களை சாப்பிடப் பிடிக்கவில்லையாம்.
மக்கள் கருத்து
7.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ள அந்த வீடியோவைப் பார்த்த மக்கள், உலகத்தில் எத்தனையோ பேர் உணவு இல்லாமல் பசி, பட்டினியிலும், வறுமையிலும் தவிக்கிறார்கள்.
நீங்கள் சமூக ஊடகத்தில் பெருமை பீற்றிக்கொள்வதற்காக 120 டொலருக்கு திராட்சைப் பழங்களை வாங்கியிருக்கிறீர்கள், உங்களுக்கு நல்ல மனது இல்லை என்னும் தோரணையில் கருத்துக்களை பதிவு செய்துவருகிறார்கள். சாதாரண திராட்சைப் பழங்கள் வாங்க கூட எனக்கு வசதி இல்லை என்கிறார் மற்றொருவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |