உலகில் 8 நாடுகளில் நள்ளிரவில் நடந்த ஒரே மாதிரியான 900 சம்பவங்கள்! திட்டமிட்டு நடத்திய போராட்டம்
உலகில் உள்ள 8 பிரபலமான நாடுகளில் உள்ள பிரதான நகரங்களில் ஒரே இரவில் 900-க்கும் மேற்பட்ட எஸ்யூவி கார்களின் டயர்களில் காற்றை இறக்கிவிட்டு நூதன போராட்டம் நடந்துள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவான The Tyre Extinguishers இதனை நிகழ்த்தியுள்ளனர்.
நவம்பர் 28 திங்கட்கிழமை மாலை முதல் மற்றும் நவம்பர் 29 செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை இந்த 8 நாடுகளில் சுமார் 900-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனங்களின் (SUV) டயர்களை காற்றை இறக்கிவிட்டதாக ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.
ஜேர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து பிரித்தானியா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரியா ஆகிய 8 நாடுகளில் உள்ள பல முக்கிய நகரங்களில் ஒரே நாள் இரவில் திட்டமிட்டு இதனை செய்துள்ளனர்.
Twitter @T_Extinguishers
குழுவின் ஆதரவாளர்கள், நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாம் மற்றும் என்ஷெட், பிரான்சில் பாரிஸ் மற்றும் லியோன், ஜேர்மனியில் பெர்லின், பான், எசன், ஹனோவர் மற்றும் சார்ப்ரூக்கன், பிரித்தானியாவில் பிரிஸ்டல், லீட்ஸ், லண்டன் மற்றும் டண்டீ, ஸ்வீடனில் உள்ள மால்மோ, இன்ஸ்ப்ரூக், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்தில் சூரிச் மற்றும் வின்டர்தூர் மற்றும் அமெரிக்காவில் நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள SUV-களின் டயர்களில் காற்றை இறக்கிவிட்டுள்ளனர்.
இது வரலாற்றில் அதிக கார்பன் வாகனங்களுக்கு எதிரான மிகப்பெரிய ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை என்றும், இன்னும் இதுபோன்று பல சம்பவங்கள் காத்திருப்பதாகவும் குழு தெரிவித்துள்ளது.
The Tyre Extinguishers குழுவை ஆதரிக்கும் ஆர்வலர்கள், மார்ச் முதல் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நகரங்களில் 10,000 SUV-களுக்கு மேல் இதுபோன்று காற்றை இறக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
SUV கார்கள் பெருமளவில் காலநிலை பேரழிவு மற்றும் கடுமையான காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் என்று அந்தக் குழு நம்புகிறது.