இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜுன்.., காலையில் விடுவிப்பு

Allu Arjun Pushpa 2: The Rule
By Sathya Dec 14, 2024 04:30 AM GMT
Report

பெண் உயிரிழந்த விவகாரத்தில் இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அர்ஜுன் ஜாமீன் பெற்றதையடுத்து காலையில் விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வந்தார்

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் வெளியானது. இதனால், திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அப்போது, நடிகர் அல்லு அர்ஜுன் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புடன் திரையரங்கிற்கு வந்துள்ளார்.

அங்கு, அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திரையரங்கின் இரும்பு கேட் சரிந்து விழுந்து பலரும் கீழே விழுந்தனர்.

இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜுன்.., காலையில் விடுவிப்பு | Actor Allu Arjun Is Out Of Jail Today

அதில், 35 வயதுடைய பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். அவருடைய மகனுக்கு படுகாயமும், கணவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

இதையடுத்து, பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்திற்கு முறையான ஏற்பாடுகளை திரையரங்கு நிர்வாகத்தினர் செய்யவில்லை என்றும், நடிகர் அல்லு அர்ஜுன் முன்னறிவிப்பு இன்றி தியேட்டருக்கு வந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் பொலிஸார் கூறினர்.

பின்னோக்கி இயக்கப்பட்ட பயணிகள் ரயில்.., ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

பின்னோக்கி இயக்கப்பட்ட பயணிகள் ரயில்.., ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

பின்னர், காவல் துறை தரப்பில் நடிகர் அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள், திரையரங்கு நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, திரையரங்கு உரிமையாளர், மேலாளர், ஊழியர் என மூவர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

அதேபோல, தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜுன்.., காலையில் விடுவிப்பு | Actor Allu Arjun Is Out Of Jail Today

இந்நிலையில், நேற்று ( டிச 13) ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்தனர். பின்னர், அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி அவர் தெலங்கானாவில் உள்ள சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, ஜாமீன் வழங்கக்கோரி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறி இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இருந்தாலும் முறையான ஜாமீன் ஆவணங்கள் கிடைக்காததால் சிறை அதிகாரிகள் அவரை வெளியில் அனுப்ப மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச 14) காலை 7 மணியளவில் சிறையில் இருந்து வெளியே விடுவிக்கப்பட்டார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US