காபூல் விமான நிலைய தாக்குதல் நடத்தியவர் இந்தியாவில் தங்கியிருந்தார்! மாணவராக இருந்து கொண்டு செய்த செயல்.. முக்கிய தகவல்
காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவரின் விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் இந்தியாவில் தங்கியிருந்ததோடு 5 ஆண்டுகளுக்கு முன்னர் நாடு கடத்தப்பட்டவர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினார்கள். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள், நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் திரண்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 27ல் காபூல் விமான நிலைய வாயிலில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 183 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியவர் குறித்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சவாத் அல் ஹிந்த் என்ற பத்திரிகையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர் அப்துர் ரஹ்மான அலோக்ரி.
காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கும் வகையில் பசுக்களை வழிபடும் ஹிந்துக்களை கொல்வதற்காக அலோக்ரி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். கடந்த 2018ல் நம் நாட்டில் வெளியான செய்திகளில் டில்லியை அடுத்துள்ள பரிதாபாத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் அலோக்ரி படித்து வந்தார்.
ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக இவர் செயல்படுவதாக தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.