காபூலில் என் வீட்டு வாசலில் நான் கண்ட காட்சி! இளம்பெண்களின் கதி... 22 வயதான கல்லூரி மாணவியின் வீடியோ
காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளம்பெண் ஒருவர் இனி நான் மீண்டும் கல்வி கற்பதை தொடரை முடியுமா என தெரியவில்லை எனவும், நாட்டில் உள்ள இளம்பெண்களின் கதி என்னவாகும் என்பது கேள்விகுறியாகியுள்ளது எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிவிட்ட நிலையில் அங்குள்ள பெண்களின் நிலை கேள்விகுறியாகியுள்ளது. முக்கியமாக கல்வி பயின்று சாதிக்க நினைக்கும் இளம்பெண்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வரும் ஆயிஷா குராம் (22) வேதனையுடன் பேசியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய முதல் நாளிலேயே என் வீட்டு வாசலில் கத்தலும், துப்பாக்கிச்சூடும் நடைபெறும் காட்சியை பார்த்தேன்.
சில திருடர்கள் தங்களை தாலிபான்களின் ஒரு பகுதியான முஜாயிதீன் என கூறி கொண்டு பொதுமக்களின் பொருட்களையும், கார்களை திருட முயன்றனர். தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய அன்றைய தினம் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகள் எங்களுக்கு (மாணவிகளுக்கு) குட் பை சொன்னார்கள்.
"I personally do not know whether I would be able to go back to university."
— Bloomberg (@business) August 23, 2021
What will Afghanistan be like for women and girls under Taliban rule? 22-year-old @AishaKHM is hopeful but vigilant of what this new reality could bring. https://t.co/lf1qqnaL8Z via @bopinion @Quicktake pic.twitter.com/bjsnO7Qic1
பெண்கள் இனி பல்கலைக்கழகம் வரக்கூடாது அல்லது ஆண் மாணவர்களுடன் சேர்ந்து பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடாது என தாலிபான்கள் நினைத்ததை தான் ஆசிரியைகள் அப்படி சொன்னார்களா என தெரியவில்லை. பெண்களை மதித்து அவர்கள் உரிமைக்கு மரியாதை கொடுப்போம் என தாலிபான்கள் கூறினர்.
ஆனால் நடப்பதை பார்த்தால் அப்படி தெரியவில்லை. மீண்டும் என்னால் பல்கலைக்கழத்துக்கு செல்ல முடியுமா என தெரியவில்லை. தாலிபான்கள் தற்போது ஆப்கானில் முழு பலத்துடன் உள்ளனர், நாட்டில் உள்ள இளம்பெண்கள் அனைவரும் கைவிடப்பட்டதாகவே உணர்கிறோம்.
எங்களின் எதிர்காலம் என்னவாகும்? உலகம் எங்களை தனித்து விட்டுவிடாது என நம்புகிறோம் என கூறியுள்ளார்.