பெண் வேடத்தில் மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள்! தாக்குதலில் உயிர் தப்பிய முன்னாள் பிரதமர்.. இருவர் பலியானதாக தகவல்
ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யார், தனது ஆதரவாளர்களுடன் காபூலில் உள்ள மசூதிக்குள் தொழுகைக்காக கூடியிருந்தார்.
மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள்
அப்போது ஹெக்மத்யாரைக் கொல்ல தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
பர்தா அணிந்து அலுவலக பகுதிக்குள் நுழைந்த தற்கொலை தாக்குதல்தாரிகளை பாதுகாப்பு படையினர் கொன்றதாக அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
@EPA
ஹெக்மத்யார் பேச்சு
இந்த நிலையில் இதுகுறித்து ஹெக்மத்யார் கூறுகையில், 'எனது நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன், பலமுறை அதைச் செய்து தோல்வியுற்றவர்களால் இங்கே ஒரு தோல்வியுற்ற முயற்சி நடந்தது. இந்த தாக்குதலுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை' என தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரை கொலை செய்ய நடந்துள்ள முயற்சி ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@AFP Photo