ஆப்கானிஸ்தானில் குடும்பத்தை காப்பாற்ற கடன் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்துள்ள நிலை! கண்ணீர் சிந்தும் பரிதாபம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்பு, அங்கு பொருளாதார சரிசு ஏற்பட்டுள்ள நிலையில், கடனை வாங்கியவர்கள் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் பிள்ளைகளை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், அங்கு ஆட்சி செய்து வருகின்றனர். தலிபான்கள் ஆட்சி காரணமாக ஆப்கானிஸ்தான் கடுமையான பொருளாதார சரிவில் உள்ளது.
இதன் காரணமாக அங்கிருக்கும் சில குடும்பங்கள் தங்களுடைய கடன்களை அடைப்பதற்கு குழந்தைகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நாட்டின் மேற்கு நகரமான Herat-ல் நாள் ஒன்றிற்கு வெறும் 50p-க்கு சம்பாதித்தி வரும் Saleha என்ற பெண், தன்னுடைய குடும்பத்திற்கு உணவளிப்பதற்காக 400 பவுண்ட் கடன் வாங்கியிருக்கிறார்.
தற்போது அந்த கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், கடன் கொடுத்தவர் அவருடைய மூன்று வயது மகளை விற்றால் கடனை தள்ளுபடி செய்வதாக கூறுவதாக வேதனையுடன் கூறுகிறார்.
மூன்று மாதங்களில் கடனை திருப்பி தரவில்லை என்றால், அவரின் மகள் பருவமடையும் போது, அவருடைய மகன்களில் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமாம்.
பண இருப்பு ஆப்கானிஸ்தானில் குறைந்து வருவதால், அங்கு மனிதாபிமான நெருக்கடியை மக்கள் எதிர் கொண்டு வருகின்றனர். ஹெராட்டில் உள்ள மற்ற குடும்பங்களும், தங்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக தங்கள் குழந்தைகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருப்பவர்கள் கூறியுள்ளனர்.
நாணயத்தின் மதிப்பு குறைவு காரணமாக அங்கு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், உணவு பஞ்சம் ஏற்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. Saleha மற்றும் அவரது குடும்பத்தினர் பட்கிஸில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
தாலிபான்களின் வருகை காரணமாக ஹெராத்துக்கு தப்பி ஓடி வந்த அவர்கள் சாப்பிட்டிற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு மாவு மற்றும் எண்ணெய் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.
அவர், வாழ்க்கை இதை விட இன்னும் மோசமாக இருந்தால், நான் என் குழந்தைகளையும் என்னையும் கொன்றுவிடுவேன், வரும் எத்தனை இரவுகள் நான் முழுமையாக சாப்பிடுவோம் என்று கூட தெரியாது.
என் மகளின் உயிரைக் காப்பாற்ற நான் பணம் கண்டுபிடிக்க முயற்சிப்பேன், இல்லையென்றால் கொன்றுவிடுவேன் என்று வேதனையாக கூறியுள்ளார்.