நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் ஆப்கானியர்கள் செய்த செயல்! நெஞ்சை உருக்கும் காட்சி
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்த ஆப்கானியர்கள் கழிவுநீரில் இறங்கி உள்ளே விடுமாறு கெஞ்சிய நெஞ்சை உருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு படைகள் நாட்டில் இருக்கக்கூடாது என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, காபூலில் இருக்கும் குடிமக்களையும், தங்களுக்கு உதவிய ஆப்கானியர்களையும் நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் வெளிநாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
31ம் தேதியோடு வெளிநாட்டு படைகள் ஆப்கானை விட்டு வெளியேறினால், நாட்டை விட்டு வெளியேற தவிக்கும் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை மீட்க முடியாது என பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் எச்சரித்துள்ளன.
இதனிடையே, ஆகஸ்ட் 31ம் தேதி அன்று அமெரிக்க இராணுவம் ஆப்கானை விட்டு முழுமையாக வெளியேறிவிடும் என ஜனாதிபதி பைடன் உறுதியளித்துள்ளார்.
காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற ஆப்கானியர்கள் குவிந்து வருகின்றனர்.
Devastating scenes at Kabul airport. Knee deep in sewage, waving their papers, begging to be let in. @ABC #Kabul #Taliban #Afghanistancrisis pic.twitter.com/BZccCe1vu8
— Ian Pannell (@IanPannell) August 25, 2021
இந்நிலையில், விமான நிலையத்திற்கு வெளியே முழங்கால் அளவு இருக்கும் கழிவுநீர் ஓடையில் இறங்கிய நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள், தங்கள் ஆவணங்களை அசைத்து, உள்ளே விடுமாறு கெஞ்சும் நெஞ்சை உருக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.