காபூலுக்குள் நுழைந்து ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலீபான்கள்! கடும் பீதியில் நாட்டை விட்டு ஓடும் மக்கள்: பதவி விலகிய ஜனாதிபதி?
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தாலீபான்கள் ஆட்சி அமைக்கவுள்ளதாகவும், ஜனாதிபதி பதவி விலகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் சில வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாகவே தாலீபான்கள் அங்கிருக்கும் ஒவ்வொரு பகுதியையும் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
அதன் படி நாட்டின் மிக முக்கிய நகரமான, வெளிநாட்டு தூதரகங்கள் இருக்கும் காபூலை இன்று தாலீபான்கள் கைப்பற்றிவிடுவார்கள் என்று கூறப்பட்டது.
இதனால் அங்கிருக்கும் தங்கள் நாட்டு தூதர்களை, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள், தங்கள் நாட்டு துருப்புகளை அனுப்பி காப்பாற்றி வருகின்றன.
இந்நிலையில், சற்று முன் காபூல் நகரில் தாலீபான்கள் நுழைந்தது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. இதையடுத்து தற்போது தாலீபான்களிடம் மீண்டும் ஆட்சி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆப்கான் தலைநகர் காபூல் எல்லையில் தலீபான்கள் சூழ்ந்துள்ள நிலையில் மக்கள் பயத்தில் நகரை விட்டு தப்பி ஓடி வருகிறார்கள். காபூலை போர், மோதல் என ஏதுமின்றி கைப்பற்றுவோம் என தலீன்பான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Capital Kabul right now, Traffic blocked, everyone is in a hurry and are rushing to their homes.#Kabul #Afghanistan pic.twitter.com/mk5W4lVolm
— Newsistaan (@newsistaan) August 15, 2021
இருப்பினும் மக்கள் தங்கள் கார்களில் தப்பி ஓடி வருவதால், நகரில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
இதனால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிலர் தங்கள் வாகனங்களை விட்டுவிட்டு விமான நிலையத்திற்கு நடந்து செல்வதாக கூறப்படுகிறது. அது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
Confusion on the streets in #Kabul as everyone is rushing to somewhere with rumors swirling about the Taliban arriving into town, causing massive traffic congestion. What takes 20 minutes would now take 2 hours to get anywhere. #afghanistan pic.twitter.com/OwYSA4GcXF
— Umar Sheikh (@umarmarve) August 15, 2021