பிரித்தானியாவிற்கு வந்த ஆப்கான் அகதிகள் நிலை என்ன? வெளி வரும் முக்கிய தகவல்
பிரித்தானியாவில் ஹோட்டலில் தங்கியுள்ள ஆப்கான் அகதிகள் தங்களை வீட்டுக்கு அனுப்பும் படி கெஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் வசம் வந்துவிட்டதால், அங்கிருந்த ஏராளமான மக்கள் உயிருக்கு பயந்து, விமானங்களில் ஏறி சென்று உயிர் தப்பினர்.
அப்படி பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டு, ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானியர்கள், தாலிபான்களின் காடுப்பாட்டில் உள்ளே தங்கள் நாட்டிற்கே திரும்ப விரும்புவதாகவும், தங்களை வீட்டிற்கு அனுப்பும் படி கெஞ்சுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தனியர்கள், ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தின் பிற்பகுதியில் உள்துறை அலுவலக நிரந்தர செயலாளர் Matthew Rycroft, சுமார் 7,000 பேர் அவசரகால தங்குமிடங்களில் இருப்பதாக கூறினார்.
மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீள் குடியேற்ற திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் திகதி துவங்கப்பட்டது. ஆனால் ஒரு மருத்துவர் தன்னிடம் இங்கிருக்கும் ஒரு சில நோயாளிகள் வீட்டுக்குச் செல்ல விரும்புவதாக தன்னிடம் சொன்னதாக கூறியுள்ளார்.
பிரபல ஆங்கில ஊடகமான கார்டியனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அங்கு தங்கியிருந்த ஆப்கானிஸ்தனியர்களுக்கு மருந்து கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது அங்கிருந்த சில நோயாளிகள் தங்கள் வீட்டிற்கு செல்ல விரும்புவதைக் கண்டேன் என்றும், ஒரு சிலர் மிகுந்த வருத்ததில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஏனெனில், பிரித்தானியாவில் உள்ள ஆப்கானியர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் திட்டம் கடும் விமர்சனத்தை பெற்று வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Health charity Medcat(அறக்கட்டளை) புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.
லண்டனின் கிரீன்விச்சில், கிட்டத்தட்ட 700 ஆப்கானியர்கள் உள்நாட்டில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்தவுடன் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து தெளிவு இல்லாததை கவுன்சில் கண்டித்துள்ளது.
கவுன்சிலின் துணைத் தலைவர் Denise Scott-McDonald, ஆப்கானிஸ்தான் அகதிகள் பயத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்கள், அடுத்து எங்கு அனுப்பப்படுவோம் என்ற கவலையில் உள்ளனர்.
அரசாங்கத்தின் அடிப்படை தலைமை இல்லாததால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
உள்துறை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பிரித்தானியா 15,000-க்கும் அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பாக உதவி வருகிறது. மேலும் நாங்கள் இங்கு கொண்டு வந்தவர்களுக்கு இடமளிக்க உதவும் ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே ஹோட்டல்கள் உள்ளன.
அனைவருக்கும் நிரந்தர வீடுகள் கண்டுபிடிக்க நேரம் எடுக்கும், ஆனால் நாங்கள் அதைச் செய்ய எங்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.
பிரித்தானியாவில் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க இங்கு மீள்குடியேறிய அனைவருக்கும் ஆதரவளிப்பதே எங்களின் நோக்கம். இதன் காரணமாக தான், நாங்கள் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்க 24 மணிநேரமும் உழைத்து வருகிறோம்.
ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கியிருக்கும் அனைவருக்கும் அத்தியாவசிய ஏற்பாடுகள், சுகாதாரம், கல்வி மற்றும் உலகளாவிய கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பிரித்தானியா முழுவதும் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.