ஆப்கானில் எங்களது நிலை...! விமானநிலையத்தில் கதறி அழும் பெண்மணி
ஆப்கானிஸ்தாவில் இருந்து தப்பி இந்தியாவிற்கு வந்த ஆப்கன் பெண் ஒருவர் இந்தியா குறித்து உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேறிய சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
நாடு முழுவதும் தாலிபான்கள் வசமுள்ளதால் மக்கள் உயிருக்கு பயந்து தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருவதால் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆப்கனில் சிக்கியுள்ள மக்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்திய விமானப் படை விமானத்தின் மூலம் 168 பேர் ஆப்கனில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்த விமானத்தில் இந்தியர்கள் உடன் அந்நாட்டைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் இந்தியாவுக்கு வந்தனர்.
இந்தியா வந்தடைந்த ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுள் ஒருவரான சதியா செய்தியாளர்களிடம் பேசியது, ஆப்கானில் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பற்றி எடுத்து கூறினார். தாலிபான்கள் அவரை குடும்பத்துடன் சில நாட்கள் சிறைபிடித்து வைத்திருந்ததாகவும் அவர்கள் தங்கி இருந்த வீட்டை எரித்து நடுரோட்டியில் தவிக்க வைத்துள்ளனர்.
"Situation was deteriorating in Afghanistan, so I came here with my daughter & two grandchildren. Our Indian brothers & sisters came to our rescue. They (Taliban) burnt down my house. I thank India for helping us," says an Afghan national at Hindon Air Force Station, Ghaziabad pic.twitter.com/Pmh1zqZZCB
— ANI (@ANI) August 22, 2021
ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் உயிர் பிழைக்க குடும்பங்களுடன் சேர்ந்து இந்தியாவிற்கு வந்துவிட்டோம் என்று கூறினார்கள்.
எங்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியாவிற்கு மிகவும் நன்றி. உண்மையிலே இந்தியா ஒரு சொர்க்க பூமி என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.