ஆப்கானிஸ்தான் மகளிர் விவகாரத்தில் தாலிபான்கள் தொடுத்த அடுத்த தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் திறக்கப்பட்ட மகளிருக்கான முதல் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி தாலிபான்கள் அச்சுறுத்தலுக்கு பயந்து தற்காலிகமாக மூடப்பட்டது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலாப் துராணி என்ற 23 வயது பெண் சில ஆண்டுகளாக மகளிர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வந்துள்ளார். ஆனால் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததையடுத்து அவரது பயிற்சி பள்ளிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஒருவர் கூட பயிற்சி பெற வரவில்லை என நிலாப் கூறுகிறார். பதிவு செய்திருந்த பெண்கள் வகுப்புகளுக்கு வரலாமா என கேட்பதாகவும், ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் முடிவெடுக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தற்போது இரு ஊழியர்களுடன் இயங்கி வரும் குறித்த பயிற்சி பள்ளியானது, ஆப்கானிஸ்தானின் வேறு நகரங்களிலும் திறந்து செயல்படும் திட்டத்துடன் இருந்ததாக நிலாப் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக கூறிய அவர் தற்போது தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தார்.
சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பெண்களை வணிகத்தில் ஈடுபட தாலிபான்களை நிர்பந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.