ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்ட நாளில் காபூல் வானில் போராடிய இந்திய விமானம்!

India Flight Afghanistan Kabul Air India
By Ragavan Aug 16, 2021 11:45 PM GMT
Report

இந்தியாவிலிருந்து 40 பயணிகளோடு ஆப்கன் தலைநகர் காபூல் சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்குவதற்கு மூன்று மணி நேரமாக போராடிய சம்பவம் வெளிவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இந்தியத் தலைநகர் டெல்லியில் இருந்து 40 பயணிகளோடு ஏர் இந்தியா விமானம் ஒன்று ஆப்கன் தலைநகர் காபூலுக்கு சென்றுகொன்றிருந்தது.

காபூலில் அன்று 35 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. 20 ஆண்டுகால அமெரிக்க ஆதரவு பெற்ற அரசாங்கம் சரிந்து விழ, தாலிபன்கள் காபூலை கைப்பற்றிக்கொண்டிருந்தா நேரம் அது.

ஆனால், தரையில் எவ்வளவு வேகமாக அரசியல் நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது என்பது அந்த விமானத்தின் 6 ஊழியர்களுக்கு தெரியாது.

ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்ட நாளில் காபூல் வானில் போராடிய இந்திய விமானம்! | Afghanistan Air India Flight Struggle Kabul Sunday

விமானத்தின் பைலட்டுகள் விமானத்தை தரையிறக்கத் தயாரான நேரத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானத்தை வானத்திலேயே பறந்துகொண்டிருக்கும்படி அறிவுறுத்தினர்.

காரணம் எதையும் அவர்கள் கூறவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரத்துக்கு அந்த விமானம் தலைநகர் காபூலை 16 ஆயிரம் அடி உயரத்தில் சுற்றிக்கொண்டே இருந்தது என்கின்றன ஏர் இந்தியா வட்டாரங்கள்.

சில நேரங்களில் காபூலுக்கு மேலே விமானத் தகவல் தொடர்பு சரிவர இருக்காது என்பதால், தரையிறங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று கருதி அந்த விமானம் கூடுதல் எரிபொருளுடன்தான் சென்றிருந்தது.

ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்ட நாளில் காபூல் வானில் போராடிய இந்திய விமானம்! | Afghanistan Air India Flight Struggle Kabul Sunday

பல நேரங்களில் காபூல் விமான நிலையத்துக்கு மேலே விமானங்கள் அதிகமாக பறக்கும், எனவே அது சோர்வூட்டுவதாகவும் இருக்கும் என்கிறார்கள் விமானிகள்.

ஆண்டின் இந்தக் காலப்பகுதியில் நகரைச் சுற்றிப் பறப்பதில் வேறொரு சவாலும் இருக்கிறது. இந்தக் காலப் பகுதியில் காற்று வேகமாகவும், வலிமையாகவும் இருக்கும்.

ஏர் இந்தியா விமானம் மட்டும் இல்லாமல் குறைந்தது வேறு இரண்டு வெளி நாட்டு விமானங்களும் தரையிறங்குவதற்கான அனுமதியை எதிர்நோக்கி வானில் பறந்துகொண்டிருந்தன.

160 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தை கேப்டன் ஆதித்ய சோப்ரா என்ற விமானி இயக்கிக்கொண்டிருந்தார். விமானம் கடைசியாக உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30க்கு தரையிறங்கியது.

டெல்லியில் இருந்து காபூல் வரை விமானத்தில் செல்வதற்கு வழக்கமாக 105 நிமிடம் முதல் 120 நிமிடம் வரை ஆகும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை சிக்கலான நேரத்தில் காபூல் சென்ற இந்த விமானம் தரையிறங்கும் வரை மூன்றரை மணி நேரம் ஆனது.

தரையில் இருந்த பதற்ற நிலையை அறிய முடிந்ததாகவும், ஆனால், அது எப்படிப்பட்ட பதற்றம் என்று தெளிவாகத் தெரியவில்லை என்றும் விமானத்தில் இருந்த சில பயணிகள் கூறினர்.

ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்ட நாளில் காபூல் வானில் போராடிய இந்திய விமானம்! | Afghanistan Air India Flight Struggle Kabul Sunday

ஓடுபாதையில் சிப்பாய்கள் சுற்றிக்கொண்டிருந்தனர். பல விமானங்கள் விண்ணில் சீறிக்கொண்டிருந்தன. சி17 குளோப் மாஸ்டர் ராணுவ போக்குவரத்து விமானமும், சினூக் ஹெலிகாப்டரும் பறந்து வந்து தரையிறங்குவதும், கிளம்பிச் செல்வதுமாக இருந்தன.

பாகிஸ்தான் மற்றும் கத்தாருக்கு சொந்தமான பயணிகள் விமானங்கள் விமான நிலையத்தில் பார்க் செய்யப்பட்டிருப்பதையும் அவர்கள் கவனித்தனர்.

"விமான நிலைய ஊழியர்கள் விமான நிலையத்திலேயே தங்கியிருப்பதாக கேள்விப்பட்டோம். விமான நிலையத்தில் நுழைவதற்கு ஏராளமான மக்கள் முயன்றுகொண்டிருந்தனர்," என்று ஏர் இந்தியா விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குறிப்பிட்டார்.

விமானம் தரையிறங்கியவுடன் விமான ஊழியர்கள் காக்பிட் எனப்படும் விமானி அறையிலேயே இருந்தனர். காபூலில் இதுதான் எப்போதும் நடைமுறை.

ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்ட நாளில் காபூல் வானில் போராடிய இந்திய விமானம்! | Afghanistan Air India Flight Struggle Kabul Sunday

ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் விமான நிலையத்தில் காத்திருந்த பிறகு 129 பயணிகளுடன் அந்த ஏர் இந்தியா விமானம் மீண்டும் புறப்பட்டது.

அதில், பல ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இருந்தனர். குறைந்தபட்சம் இரண்டு எம்.பி.க்கள் இருந்தனர். முன்னாள் அதிபருக்கான முதுநிலை உதவியாளர் ஒருவர் இருந்தார். காபூலில் நிலவிய போக்குவரத்து நெரிசலில் சிக்கி இன்னும் பலர் அந்த விமானத்தை தவறவிட்டிருக்கக்கூடும்.

"தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆலாய்ப் பறக்கும் குடிமக்களின் துயரத்தை முன்னெப்போதும் பார்த்ததில்லை நான். விமானத்துக்குள் நடந்து நுழைந்த அவர்களின் கண்களில் எப்படியாவது வெளியேறிவிடவேண்டும் என்ற அவஸ்தை தெரிந்தது," என்று ஒரு பயணி குறிப்பிட்டார்.

அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் ஆப்கானியர்கள். நாடு திரும்பும் இந்திய தொழிலாளர்கள் பலரும் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்ட நாளில் காபூல் வானில் போராடிய இந்திய விமானம்! | Afghanistan Air India Flight Struggle Kabul Sunday

ஞாயிற்றுக்கிழமை மாலை நாட்டை விட்டு வெளியேறும் விமானத்தைப் பிடிப்பதற்காக ஆப்கானியர்கள் முண்டியடித்துக் கொண்டு விமான நிலையத்தில் நுழைந்தனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பலரும் விமான நிலையத்தில் மொய்த்துக்கொண்டிருப்பதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாயின. பல முக்கிய விமான நிறுவனங்கள் ஆப்கானிஸ்தான் மீது பறப்பதை தவிர்ப்பதற்காக வேறு பாதைகளில் தங்கள் விமானங்களை திருப்பிவிட்டன.

நாட்டில் இருந்து மக்களை மீட்பதற்கான ஏர் இந்தியா விமானத்துக்காக முண்டியடித்துக்கொண்டு ஓடும் பயணிகளைக் காட்டும் காணொளிகள் வெளியாயின. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, பிரான்ஸ், France

25 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

இயக்கச்சி சங்கதார்வயல், கண்டாவளை, நீர்கொழும்பு

26 Jun, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, மானிப்பாய், பிரான்ஸ், France

28 Jun, 2000
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark

28 Jun, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தல்தீவு, அடம்பன்

09 Jul, 2024
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, La Courneuve, France

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US