ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 1000ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனிடையே, இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹெராத் நகரில் இருந்து 40 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.
AFP
மேலும் எட்டு முறை நிலநடுக்கம் தொடர்ந்தன. நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்தன.
ஹெராத் மாகாணத்தில் சுமார் 600 வீடுகள் அழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 4200 பேர் வீடிழந்தனர்.
ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஹெராட்டில் சுமார் 1.9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |