அகதிகளாக ஏத்துக்கோங்க! தாலிபான்களின் வருகையால் கெஞ்சும் தூதர்கள்: குடும்பத்தை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் அச்சம்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அதிகளாக ஏற்றுக் கொள்ளும் படி தூதர்கள் கெஞ்சி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 15-ஆம் திகதி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினர். இதையடுத்து அங்கிருக்கும் வெளிநாட்டினர் மற்றும் உள் நாட்டு மக்கள் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறினார்.
இதையடுத்து தற்போது தாலிபாங்கள் ஆப்கானிஸ்தானில் தால்பான்கள் அறிவித்துள்ள பிரதமர் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் தேடப்பட்ட தீவிரவாதிகளாக இருந்தவர்கள். சிலர் குவான்டனாமோ சிறையிலும் இருந்தவர்கள்.
இதனால், இங்கு அமைந்துள்ள தலிபான் ஆட்சியை இன்னும் எந்தவொரு நாடும் வெளிப்படையாக அங்கீகரிப்பதாகத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான் வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானி தூதர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.
பெர்லினில் உள்ள ஆப்கன் தூதரக அதிகாரி பெயர் தெரிவிக்காமல் இது குறித்து கூறுகையில், நானும் எனது உறவினர்களும் நாங்கள் இருக்கும் நாடுகளே எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஆப்கானிஸ்தானில் எனது குடும்பம் இருக்கிறது. எனது மனைவியும் 4 மகள்களும் அங்கே உள்ளனர். அவர்களுக்கு என்ன ஆகும் என்று ஒவ்வொரு நிமிடமும் பயத்திலே உள்ளேன். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் நானும் என்னைப்போல் உள்ள சில தூதர்களும் அடைக்கலம் வேண்டி இரைந்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் எல்லோரும் இருக்கும் நாட்டிலேயே அகதிகளாகி குடும்பத்தையும் இங்கேயே வரவழைக்க முயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
ஆனால், ஆப்கானிஸ்தானி இடைக்கால வெளியுறவு அமைச்சரான முல்லா அமீர் கான் முட்டாகி, வெளிநாடுகளில் உள்ள ஆப்கன் தூதரகங்கள் வழக்கம்போல் இயங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிநாட்டு தூதர்கள் ஆப்கானிஸ்தானின் சொத்து என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி எனப் பல்வேறு நாடுகளிலும் ஆப்கன் தூதரங்களைச் சார்ந்து 3000 பேர் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆப்கன் தூதர்கள், தூதரக அதிகாரிகள் நிலை குறித்து பிரித்தானிய பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், தூதரகங்கள் செயலற்றுவிட்டன.
தூதர்கள் இப்போது எந்த ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் இல்லை. அவர்கள் செயல்படுத்த அரசின் கொள்கை என்று ஏதுமில்லை. இப்போதைக்கு தூதரக அதிகாரிகளுக்கு அரசியல் ரீதியாக அடைக்கலம் கொடுக்கலாம்.
ஆனால், அதுவே ஆப்கானிஸ்தானுக்கு அவர்கள் திரும்பிச் சென்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற ரீதியில் வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதர்களுக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.