தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்பு பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு நேர்ந்துள்ள கதி! பரிதாப பின்னணி
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அடக்குமுறையால் பெண் பத்திரிகையாளர் ஒருவர் குடும்பத்தினரைக் காப்பாற்ற சாலையோர வியாபாரியாக மாறியுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா, நோட்டோ படைகள் வெளியேறிய பின்பு, ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆட்சியை கைப்பற்றிய பின்பு, கடந்த முறை ஆட்சியைப் போல் மோசமாக இருக்காது, பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும், பொருளாதாரம் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.
பெண்கள் எந்த வேலைக்கும் செல்லக்கூடாது, குறிப்பாக ஊடகங்களில் பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.
வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தலிபான்கள் ஆட்சிக்குவந்தபின் ஏராளமான ஊடகங்கள் மூடப்பட்டுவி்ட்டன, ஆயிரக்கணக்கான பெண்பத்திரிகையாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
இந்நிலையில் பர்ஜானா அயூபி என்ற பெண் பத்திரிக்கையாளர் வேலையிழந்த நிலையில் தனது குடும்பத்தைக் காக்க காபூல் நகர சாலையில் துணி வியாபாரியாக செயல்பட்டு வருகிறார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தலிபான்கள் ஆட்சிக்குப்பின் ஏராளமான ஊடகங்கள் மூடப்பட்டதால், பெண் பத்திரிகையாளர்கள் வேலையிழந்துவிட்டனர்.
எனக்கு என் குடும்பத்தினரைக் காக்க வேறு வழி தெரியாததால், சாலையோரத்தில் வியாபாரம் செய்யத் தள்ளப்பட்டுள்ளேன். சர்வதேச சமூகம், ஊடகங்கள் இங்குள்ள நிலையை கவனித்து, பிரச்சினையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.