அவர்கள் என்னை கொன்று விடுவார்கள்: நாட்டைவிட்டு வெளியேறும் கடைசி யூதர்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், உயிருக்கு பயந்து நாட்டின் கடைசி யூதர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் துப்பாக்கி முனையில் கைப்பற்றியதுடன், தற்போது ஆட்சியையும் அமைத்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த 62 வயதான Zebulon Simantov என்ற யூதர் அமெரிக்கா சென்றுவிடும் நோக்கில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற மறுத்து வந்துள்ளார். ஆனால் தாலிபான்கள் நாட்டை மொத்தமாக கைப்பற்றியுள்ள நிலையில், இறுதியில் நாட்டைவிட்டு வெளியேற அவர் ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற அவர் ஒப்புக்கொண்ட பின்னர், அண்டை நாடு ஒன்றில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது Zebulon Simantov ஹொட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா செல்ல தேவையான ஆவணங்கள் தயார் படுத்தும் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், வாய்ப்பு அமைந்தால் இஸ்ரேலில் மீண்டும் குடியேறும் திட்டமும் Zebulon Simantov வைத்திருப்பதாக சரவதேச பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. தாலிபான்களால் சிக்கல் ஏதும் இல்லை என்றாலும், ஐ.எஸ் கோரசான்களால் அச்சுறுத்தல் ஏற்படால் என்றே Zebulon Simantov அச்சம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
காபூலில் உள்ள யூத ஜெப ஆலயத்திலேயே Zebulon Simantov தங்கி வந்துள்ளார். ஆனால் அமெரிக்க துருப்புகள் வெளியேறிய நிலையில் தமது பாதுகாப்பு தொடர்பில் கவலை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது Zebulon Simantov உட்பட 29 ஆப்கானியர்கள் அண்டை நாடு ஒன்றிற்கு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலிபான்க:ளின் முந்தைய ஆட்சி காலத்திலும் Zebulon Simantov அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததில்லை எனவும், ஆனால் ஐ.எஸ் குழுவினரால் கடத்தி கொலை செய்யப்படும் வாய்ப்பு தொடர்பில் எச்சரித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மிக விரைவில் Zebulon Simantov அமெரிக்கா சென்று விடுவார் என்றே நம்பப்படுகிறது.