காபூலை சூழ்ந்த தாலீபான்கள்.. தலைநகரை விட்டு தப்பி ஓடும் மக்கள்: வெளியான பரபரப்பு காட்சிகள்
ஆப்கான் தலைநகர் காபூல் எல்லையில் தலீபான்கள் சூழ்ந்துள்ள நிலையில் மக்கள் நகரை விட்டு தப்பி ஓடி வருகிறார்கள்.
ஆப்கானில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிய தலீபான்கள், தலைநகர் காபூல் வாயில்களில் சூழ்ந்துள்ளனர்.
எனினும், காபூலை போர், மோதல் என ஏதுமின்றி கைப்பற்றுவோம் என தலீன்பான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும், போராளிகள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்கவும், நகரை விட்டு வெளியேற விரும்பவர்களுக்கு பாதுகாப்பாக வழி விடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Capital Kabul right now, Traffic blocked, everyone is in a hurry and are rushing to their homes.#Kabul #Afghanistan pic.twitter.com/mk5W4lVolm
— Newsistaan (@newsistaan) August 15, 2021
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து மக்கள் தங்கள் கார்களில் தப்பி ஓடி வருவதால், நகரில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
இதனால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சிலர் தங்கள் வாகனங்களை விட்டுவிட்டு விமான நிலையத்திற்கு நடந்து செல்வதாக கூறப்படுகிறது.
Confusion on the streets in #Kabul as everyone is rushing to somewhere with rumors swirling about the Taliban arriving into town, causing massive traffic congestion. What takes 20 minutes would now take 2 hours to get anywhere. #afghanistan pic.twitter.com/OwYSA4GcXF
— Umar Sheikh (@umarmarve) August 15, 2021
அதேசமயம், அதிகாரத்தை கைமாற்ற காபூலில் உள்ள ஜனாபதிபதி அரண்மனையில் தலீபான் தலைவர்களுடன் பேச்சுவார்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்னும், சில மணிநேரங்களில் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கனி பதவி விலக உள்ளதாகவும், இதன் பின் தலீபான் தலைவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் தகவலகள் வெளியாகி வருகின்றன.