கடத்தல் எரிபொருள் கிடங்கில் பயங்கர வெடிப்பு விபத்து: குழந்தை உள்பட 35 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான பெனினில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எரிபொருள் கிடங்கில் தீ வெடிப்பு
சனிக்கிழமையான நேற்று ஆப்பிரிக்க நாடான பெனினில் உள்ள எரிபொருள் கிடங்கில் திடீரென பயங்கர வெடிப்பு விபத்து ஏற்பட்டது.
அதாவது நைஜீரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பெனினின் Seme-Podji நகரில் கடத்தல் செய்யப்பட்ட எரிபொருட்களுக்கான கிடங்கில் இந்த வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்களின் கூற்றுப்படி, வெடிப்பு விபத்து ஏற்பட்ட போது அங்கிருந்த எரிபொருள் நிரப்பும் இடத்தில் எரிபொருள் நிரப்பி கொள்வதற்காக அங்கு கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ஆகியவை காத்து கொண்டு இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதனால் இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 35 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பைகளை இறக்கி கொண்டு இருக்கும் போது இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த பயங்கரமான வெடிப்பு தீ விபத்து சம்பவத்திற்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
அமைச்சர் தகவல்
இது தொடர்பாக பெனினின் உள்துறை அமைச்சர் அலசானோ செய்டோ, கடத்தல் செய்யப்பட்ட எரிபொருளே தீ விபத்திற்கான முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மோசமான நிலையில் கருவி விட்டதாகவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |