மூடப்பட்ட திரையரங்குகள்.. 30 வருடங்களுக்கு பின் திறப்பு! ஆனந்த கண்ணீரில் மக்கள்
ஆப்பிரிக்கா நாடான சோமாலியாவில் 30 வருடங்களுக்கு பிறகு தியேட்டர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றது. இதற்கு ஒருவிதத்தில் அந்நாட்டு அரசியல் தலைவர்களும் ஒரு காரணம். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் திரைப்படம், கேளிக்கை போன்றவற்றை மறந்துவிட்டனர் என்றே கூறவேண்டும்.
சோமாலியாவில் 1991ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் தொடங்கியதும் தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகளும் அடியோடு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை படைகள் நடத்தும் தாக்குதல் பெரும்பாலும் தியேட்டர்களை குறி வைத்து இடம்பெறுவதால் தியேட்டர் மூடப்பட்டது. இதுவே அந்நாட்டில் சினிமா அழிவிற்கு முக்கிய பங்காக மாறிவிட்டது.
இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகர் மொகாதிசுவில் நேஷனல் தியேட்டர் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தியேட்டர் திறக்கப்பட்ட முதல் நாளில் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்த குறும்படத்தினை இந்திய மதிப்பில் சுமார் ரூ.750 அதாவது 10 டாலர் கொடுத்து மக்கள் பார்த்து ரசித்தனர்.