ஆயிரக் கணக்கானோர் படுகொலைக்கு காரணமானவர்... பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் முக்கிய பிரதமர்
எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தில் ராணுவத்தை களமிறக்கி, ஆயிரக் கணக்கானோர் படுகொலைக்கு காரணமான பிரதமர் Abiy Ahmed முதன் முறையாக தேர்தலை எதிர்கொள்கிறார்.
எத்தியோப்பாவில் கடந்த 2018 முதலே ஆட்சியில் இருந்து வருபவர் Abiy Ahmed. நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 547 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை கைப்பற்றி ஆட்சியை தொடர Abiy Ahmed தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
2020 ஆகஸ்டு மாதம் நடந்திருக்க வேண்டிய பொதுத் தேர்தலானது, கொரோனா பரவல் மற்றும் கலவரங்களால் பல முறை தள்ளி வைக்கப்பட்டது.
TPLF கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த ஆட்சிக்கு எதிராக எழுந்த போராட்டங்களின் விளைவாக பிரதமர் பதவிக்கு வந்தார் Abiy Ahmed.
கடந்த தேர்தலில் EPRDF கட்சி தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தமுள்ள 547 தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த நிலையில், கூட்டணி ஆட்சியை கலைத்துவிட்டு, புதிதாக ஒரு கட்சியை தொடங்கி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார் பிரதமர் Abiy Ahmed.
தொடர்ந்து மக்கள் நல திட்டங்கள் பல அறிமுகம் செய்த பிரதமர் Abiy Ahmed, 2019ல் அமைதிக்கான உயரிய விருதான நோபல் பரிசும் பெற்றார்.
ஆனால் இதன் அடுத்த ஆண்டே, Tigray பிராந்தியத்தில் ஆட்சியில் இருக்கும் செல்வாக்கு மிக்க TPLF கட்சியின் ஆட்சியை கவிழ்க்க, ராணுவத்தை களமிறக்கினார்.
இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன், பட்டினியும் பஞ்சமும் Tigray பிராந்தியத்தில் தலைதூக்கியது. தற்போது Tigray பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தேர்தல் முன்னெடுக்கபடவில்லை.
பொதுவாக தேர்தல் முடிவடைந்து 5 நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்த 23 நாட்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.