விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமான பிளாக் பாக்ஸ் மீட்பு - விசாரணை தீவிரம்
அஹமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274-ஆக அதிகரித்துள்ளது.
ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர்.
இதில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானியர்கள், 7 போர்ச்சுகீசியர்கள், 1 கனடியர் மற்றும் 12 பணியாளர்கள் இருந்தனர்.
இதில் ஒரே ஒருவர் பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷ்வாஷ் குமார் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் குஜராத் பிரிவு தலைவர் மெஹுல் ஷா, நான்கு மருத்துவ மாணவர்கள் மற்றும் ஒரு மருத்துவரின் மனைவியும் பலியானதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
விமானம் வீழ்ந்த பகுதியில் வசித்த எட்டு பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
219 உயிரிழந்தவர்களின் உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 31 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
விபத்தின் காரணம் கண்டறிய Aircraft Accident Investigation Bureau (AAIB) குழு பிளாக் பாக்ஸை (Flight Data Recorder) மீட்டுள்ளது. உடனே ஃபோரன்ஸிக் நிபுணர்கள் தீவிர ஆய்வை தொடங்கியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் துயரமடைந்துள்ள நிலையில், அரசு சிகிச்சை, வரவேற்பு வசதி, மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுடன் 24x7 கட்டுப்பாட்டு அறையையும் அமைத்துள்ளது.
பல இடங்களில் பொதுமக்கள் இரத்ததானம் செய்து வருகிறார்கள். பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Air India Ahmedabad crash, Air India black box recovered, AAIB investigation Air India, Gujarat plane crash 2025, Flight Data Recorder found, Air India crash victims DNA test, Ahmedabad Civil Hospital updates, Air India tragedy survivor story