அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: Boeing வெளியிட்ட அறிக்கை
அஹமதாபாத்தில் ஏற்பட்டுள்ள விமான விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை, ஏர் இந்தியா விமானம் AI 171, 242 பயணிகளுடன் லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்டது.
புறப்பட்ட 5 நிமிடங்களில், மேகனி நகர் IGP தொகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.
விபத்து நேர்ந்தது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் என டிஜிசிஏ (DGCA) தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அஹமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விமானத்தில் 169 இந்தியர், 53 பிரித்தானிய பிரஜைகள், 1 கனடா பிரஜை மற்றும் 7 போர்ச்சுகீஸ் பிரஜைகள் இருந்தனர் என ஏர் இந்தியா X தளத்தில் தெரிவித்துள்ளது.
போயிங் நிறுவனம் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், "முதற்கட்ட தகவல்களை நாங்கள் கவனித்துள்ளோம். மேலதிக தகவல்களை சேகரித்து வருகிறோம்," எனத் தெரிவித்தது.
இந்த மோசமான சம்பவத்தின் பின்விளைவுகள் குறித்து பயணிகளின் குடும்பங்களுக்கு தகவல் வழங்க, ஏர் இந்தியா 1800 5691 444 என்ற ஹாட்லைன் எண்ணை அமைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு உதவுவதற்காக, பிரித்தானிய அரசு 020 7008 5000 என்ற எண்ணில் தங்கள் தூதரக சேவையை வழங்கி வருகிறது.
இந்த விபத்து விமான பாதுகாப்பு மற்றும் பயணிகள் நலன்கள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |