ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி தரவுகள் டவுன்லோடு செய்யப்பட்டதாக அறிவிப்பு
ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியின் தரவுகளை டவுன்லோடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகள் டவுன்லோடு
கடந்த 12-ம் திகதி குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது. இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர்.
மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் உயிரிழந்தவர்களை தவிர விபத்தில் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களையும் சேர்ந்து மொத்தம் இறப்பு எண்னிக்கை 274 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கறுப்பு பெட்டியை ஆய்வு செய்து விசாரணை நடத்தினால் மட்டுமே விபத்திற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர், பெட்டிக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட சேதத்தால் அதனை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தகவல் வெளியானது. ஆனால், அதனை அரசு மறுத்தது. இந்நிலையில் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.
சிவிஆர் (காக்பிட் குரல் பதிவு) மற்றும் எஃப்.டி.ஆர். (விமான தரவு பதிவு) ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், விமான விபத்து குறித்த விசாரணையானது பல்வேறு குழுக்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |