ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி சேதம்.., தரவுகளை பெற அமெரிக்கா அனுப்பும் இந்தியா
ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியின் தரவுகளை பெறுவதற்காக அதனை அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளது.
அமெரிக்கா செல்லும் கறுப்பு பெட்டி
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது.
இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விமானத்தில் உயிரிழந்தவர்களை தவிர விபத்தில் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களையும் சேர்ந்து மொத்தம் இறப்பு எண்னிக்கை 274 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கறுப்பு பெட்டியை ஆய்வு செய்து விசாரணை நடத்தினால் மட்டுமே விபத்திற்கான காரணம் தெரியவரும்.
ஆனால், பெட்டிக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட சேதத்தால், டிஜிட்டல் ரெகார்டிங் தரவை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என்று இந்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரவுகளை பெற கறுப்பு பெட்டியை அமெரிக்கா அனுப்ப உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |