வானத்திலிருந்து நேராக வீட்டின் மீது மோதி சுக்கு நூறாக நொறுங்கிய விமானம்!
பிரபல ஐரோப்பியா நாடான உக்ரைனில் விமானம் ஒன்று வானத்திலிருந்து நேராக வீட்டின் மீது மோதி சுக்கு நூறாக நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியம் 1.40 மணியளவில் Prykarpattia-வில் இந்த கோர விபத்து நடந்தததாக அவசர சேவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயில் சிக்கியவர்களை மீட்க போராடியுள்ளனர், எனினும் அவர்கள் போராட்டம் வீணாகியுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்புவதாக தீயணைப்பு வீரர்க்ள தகவல் தெரிவித்துள்னர்.
எனினும், விமானத்தில் எத்தனை பேர் பயணித்தனர், விபத்தின் போது வீட்டில் எத்தனை பேர் இருந்தனர் என்ற விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.