நாங்கள் ரெடியாக இருந்தோம்! நியூசிலாந்து விளையாடவில்லை: ரஹானே விளக்கம்
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிவுக்கு பின், இந்திய அணியின் கேப்டன் நூலிழையில் வெற்றி தடுக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி, ஐந்தாம் நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில், போதிய வெளிச்சம் இல்லாமல் விளையாட முடியாது என்று கூற, ஆட்டம் போதிய வெளிச்சமின்றி நிறுத்தப்பட்டது.
இதனால் தோல்வியின் விளிம்பில் இருந்த நியூசிலாந்து அணி, இந்த போட்டியை டிரா செய்தது.
இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்த போது, நூலிழையில் வெற்றி தடுக்கப்பட்டதால், இது குறித்து இந்திய அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே கூறுகையில், இது ஒரு மிகவும் அருமையான ஆட்டமாக இருந்தது.
எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். நியூசிலாந்து அணி நன்றாக விளையாடினார்கள். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் முதல் சீசனுக்கு பிறகு நாங்கள் நன்றாகத் திரும்பினோம். இருப்பினும் கடைசி கட்டத்தில் போட்டியின் முடிவு மாறிவிட்டது.
நாங்கள் தொடர்ந்து 5 முதல் 6 ஓவர்கள் வீச தயாராக இருந்தோம். அதை எதிர்பார்த்தோம். ஆனால், நடுவர்கள் அப்போது விளையாடிக் கொண்டிருந்த நியூசிலாந்து வீரர்களிடம் பேசிய பின்பு, போதிய வெளிச்சம் இல்லை என்று கூறினர்.
நாங்கள் பீல்டிங் செய்ய தயாராக இருந்தோம், ஆனால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அப்போது இதற்கு தயராக இல்லை.
நானும், அதன் பின் நடுவர்கள் சொல்வது சரி என்று புரிந்து கொண்டேன். ஆட்டம் டிரா ஆனது என்று கூறியுள்ளார்.