தொடர்ச்சியாக 8 சிக்ஸர் - உலக சாதனை படைத்த ஆகாஷ் குமார்
தொடர்ச்சியாக 8 சிக்ஸர் அடித்ததுடன், அதிவேக அரைசதம் அடித்து ஆகாஷ் குமார் சாதனை படைத்துள்ளார்.
உலக சாதனை படைத்த ஆகாஷ்
2025 ரஞ்சி கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா அணிகள் மோதியது.
இதில் மேகாலயா அணி முதல் இன்னிங்சில், 6 விக்கெட் இழப்பிற்கு 628 ஓட்டங்கள் குவித்தது.

இதில், 8 வது இடத்தில் களமிறங்கிய மேகாலயா வீரர் ஆகாஷ் குமார், தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள் விளாசி, 11 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள்
இது, முதல் தர கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசதம் ஆகும்.
முதல் பந்து, ஓட்டங்கள் எதுவும் கிடைக்காமல், அடுத்து 2 ஒற்றை ஓட்டங்களை ஓடிய அவர், அடுத்த 8 பந்துகளில் 8 சிக்ஸர்களை அதிவேக அரைசதம் அடித்தார்.
🚨 Record Alert 🚨
— BCCI Domestic (@BCCIdomestic) November 9, 2025
First player to hit eight consecutive sixes in first-class cricket ✅
Fastest fifty, off just 11 balls, in first-class cricket ✅
Meghalaya's Akash Kumar etched his name in the record books with a blistering knock of 50*(14) in the Plate Group match against… pic.twitter.com/dJbu8BVhb1
முன்னதாக, 2012 ஆம் ஆண்டில், லீசெஸ்டர்ஷையரின் வெய்ன் வைட், 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே அதிவேக அரைசதமாக இருந்தது.
தற்போது, ஆகாஷ் குமார் 11 பந்துகளில் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |