முக்கிய நகரங்களில் பறந்த UFO… 2023ல் வேற்றுகிரகவாசிகள் பூமியில் இறங்குவார்கள்: நிபுணர்கள் கணிப்பு
உலகின் பல்வேறு பகுதிகளில் வேற்றுகிரகவாசிகளின் யுஎஃப்ஒ பார்க்கப்பட்டதை தொடர்ந்து, 2023 இல் வேற்றுகிரகவாசிகள் இறுதியாக பூமியில் தரையிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
பார்வையிடப்பட்ட யுஎஃப்ஒ
உலகெங்கிலும் உள்ள மிக முக்கியமான பல பகுதிகளில் யுஎஃப்ஒ பார்க்கப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு நிச்சயமாக வேற்றுகிரகவாசிகள் பூமியில் தரையிறங்குவார்கள் என்று கூறுவதற்கு வழிவகுத்துள்ளது.
லாஸ் வேகாஸில் உள்ள சபையர் ஸ்டிரிப் கிளப், பாரிஸ், லண்டன், பிரேசில், சிலி மற்றும் ஜப்பானில் உள்ள ஈபிள் டவர் ஆகியவற்றின் மேலே யுஎஃப்ஒக்கள் காணப்பட்டன.
Getty
மேலும் அசாதாரண செயல்பாடுகள் அதிகம் காணப்படும் பிரித்தானியாவின் பிக் பென், ஸ்டோன்ஹெஞ்ச் மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள போனிபிரிட்ஜ் ஆகியவை பிரபலமான யுஎஃப்ஒ ஹாட்ஸ்பாட் என்று கருதப்படுகிறது.
வேற்றுகிரகவாசிகள் அனுப்பும் செய்தி
இந்நிலையில் யுஎஃப்ஒ பின்தொடர்பாளர் மாட் வெல்ஸ் தெரிவித்துள்ள தகவலில், “இது வேற்றுகிரகவாசிகள் ஒரு செய்தியை அனுப்புவது போல் உள்ளது, 'நாங்கள் ஒளிந்து கொள்ள மறுக்கிறோம். உங்கள் உலகின் மிக முக்கியமான இடங்களில் நாங்கள் இங்கே இருக்கிறோம்” என்று கூறுவது போல் உள்ளது.
Getty
முதலில் நாம் நினைத்ததை விட மிக விரைவில் ஏலியன்கள் பூமிக்கு வருவதை அனைவரும் பார்க்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “நாங்கள் அதிக எண்ணிக்கையிலான யுஎஃப்ஒ வேட்டைக் குழுக்களைப் பற்றி பேசுகிறோம், அவர்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவர்கள், ஆனால் ஒரே விஷயத்தை பற்றி அறிக்கைகள் வெளியிடுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் போர், ராணியின் மரணம், கோவிட் ஆகியவற்றை கணித்த வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் அதோஸ் சலோமி, அமெரிக்காவின் மிக ரகசியமான ஏரியா 51 விமான தளத்தில் அமைந்துள்ள நிலத்தடி போர்டல் வழியாக வேற்றுகிரகவாசிகள் 2023 இல் பூமியில் இறங்குவார்கள் என்று சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.