சுங்கவரி இல்லா 10 லட்சம் டன் கச்சா சர்க்கரை இறக்குமதிக்கு இந்தியா அனுமதி
India allows 10 lakh tonnes of duty-free raw sugar imports: 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.
உள்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அக்டோபர் 31 வரை 10 லட்சம் மெட்ரிக் டன் வரையிலான கச்சா சர்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.
வரி இல்லாத இறக்குமதி
இதன் மூலம் ஏறக்குறைய பத்து ஆண்டுகளில் முதல் முறையாகச் சர்க்கரை இறக்குமதி செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுங்க வரி விகித ஒதுக்கீட்டின் கீழ் கச்சா சர்க்கரை இறக்குமதியை அனுமதிக்கும் வகையில், வியாழக்கிழமையன்று அதன் இறக்குமதிக் கொள்கை திருத்தப்பட்டது.

TRQ (சுங்க வரி விகித ஒதுக்கீட்டு முறை) திட்டத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட அளவிலான சரக்குகளைக் குறைந்த சுங்க வரியிலோ அல்லது வரி இல்லாமலோ இறக்குமதி செய்ய முடியும்.
சமீபத்திய அறிவிப்பு, வரி இல்லாத இறக்குமதி வரம்பை 10 லட்சம் டன்களாக நிர்ணயிப்பதோடு, இத்திட்டத்தை 2026 அக்டோபர் 31 வரை நடைமுறையில் வைத்திருக்கிறது.
விநியோகம் குறைந்ததால், கடந்த இரண்டு மாதங்களில் சர்க்கரை விலை கிட்டத்தட்ட 40 சதவீதம் உயர்ந்த நிலையில், பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் நுகர்வோர் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சர்க்கரையை அதிகம் நுகரும் நாடு இந்தியா. அறிவிப்பு வெளியிடப்பட்ட திகதி வரை ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சர்க்கரைக்காக, SION E-52-ன் கீழ் வழங்கப்பட்ட முன்னேறிய அங்கீகாரங்களை (Advance Authorisations) புதிய TRQ திட்டத்திற்கு மாற்றிக்கொள்ளும் ஒருமுறை வாய்ப்பையும் அரசு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரையிலிருந்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அல்லது இனி தயாரிக்கப்படவிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
இருப்பினும், இந்த மாற்றத்தைத் தெரிவுசெய்யும் நிறுவனங்கள், இறக்குமதியின் போது தாங்கள் பெற்றிருந்த ஜிஎஸ்டி விலக்கைச் செலுத்த வேண்டியிருக்கும்.
மட்டுமின்றி, இத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை, அக்டோபர் 31-ஆம் திகதிக்குள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சர்க்கரை சந்தையைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளில், இந்த இறக்குமதித் தளர்வும் இணைந்துள்ளது.
பதுக்கல் மற்றும் ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தவும், நியாயமான விலையில் விநியோகத்தைத் தக்கவைக்கவும் நோக்கமாகக் கொண்டு, ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை சர்க்கரை வியாபாரிகள் இருப்பு வைப்பதற்கான வரம்புகளை அரசு ஏற்கனவே விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |