வெங்காயம், பூண்டு தோலை தூக்கி எறிஞ்சிடாதீங்க! எக்கச்சக்க நன்மைகள் ஒளிந்துள்ளதாம்!
பொதுவாக நம் சமையல் அறை பொருட்களில் பூண்டு, வெங்காயம் உணவிற்கு அதிமுக்கிய உணவுப் பொருள்.
வெங்காயமானது விட்டமின் சி, பி6, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்களுக்கு முக்கிய மூலக்கூறாக உள்ளது.
பூண்டானது விட்டமின் சி, பி6,தையமின், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றை நிறைவாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக இவை இரண்டும் குறைந்த கலோரி கொண்டவை. இவற்றை போல தான் இவற்றின் தோல்களில் பல நன்மைகள் ஒளிந்துள்ளது.
அந்தவகையில் வெங்காயம் மற்றும் பூண்டின் தோல் மூலம் நமக்கு கிடைக்கக்கூடும் நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
- வெங்காயத் தோலில் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, தண்ணீரை ஆறவைத்து, தலைமுடிக்கு ஷாம்பு போட்டு இந்த நீரில் கழுவினால், கூந்தலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
- வெங்காயம், பூண்டு ஆகியவற்றை வறுத்து பொடி செய்து, சமைக்கும் போது இந்தப் பொடியைச் சேர்த்துக் கொள்ளலாம். அதே போல் சாலட்டில் போட்டும் பயன்படுத்தலாம். இந்த பொடி உணவின் சுவையை அதிகமாக்கும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோலுடன் தண்ணீரில் வேகவைத்து, அதே நீரில் உங்கள் கால்களை வைக்கவும். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் நிவாரணம் கிடைப்பதுடன் அரிப்பும் நீங்கும்.
- சாதம் வடிக்கும்போது அதில் சில வெங்காய தோல்களை சேர்த்து சமைக்கும்போது அது சாப்பாட்டிற்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
- ஒரு சிறிய மெல்லிசாக இருக்கக்கூடிய காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த காட்டன் துணியில் பூண்டு தோலை வைத்து, முடிச்சு போல கட்டிக்கொள்ள வேண்டும். இதை உங்களுடைய தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்கலாம். அப்படி துவங்கும் போது அந்த பூண்டு தோளில் இருந்து வெளிவரக்கூடிய வாசத்தை நீங்கள் சுவாசித்தால் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- வெங்காய தோலை நீரில் போட்டு அதனை 10 முதல் 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் இதனை ஆறவைத்து தோல்களை தூக்கி எறிந்துவிட்டு சர்க்கரை சேர்த்து தூங்க செல்லுமுன் குடிக்கவும். இது உங்களுக்கு உள்ள தசைப்பிடிப்பு மற்றும் வலிகளை குணப்படுத்தும்.
- நன்கு கொதிக்கவைக்கப்ட்ட நீரை வெங்காயத்தோலில் போட்டு அதனை இறுக்கமாக மூடி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து அதனை குடிக்கவும். இது உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வழங்கக்கூடியது.